×

காடாம்புலியூரில் முந்திரி இயந்திர கண்காட்சி

பண்ருட்டி, ஜன. 4:   பண்ருட்டி அருகே தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் இயந்திர கண்காட்சி நேற்று நடந்தது. சங்க கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன், தலைவர் மலர் வாசகம் தலைமை தாங்கினர். செயலாளர் ராம கிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அமைச்சர்கள் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஆட்சியர் பாலசுப்ரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி ராஜேந்திரன், பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டினர். கண்காட்சியில் பல்வேறு மாநிலத்திலிருந்து ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்றன. முந்திரி தொழில் மேம்பட பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்த செயல் விளக்கம் செய்து காண்ப்பிக்கப்பட்டது. இது போன்ற கண்காட்சி முந்திரி தொழில் செய்யும் விவசாயிகளுக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது. இதில் முந்திரி தொழில் அதிபர்கள் ஆரோக்கியராஜ், சங்கர், பாரதிதாசன், பிரசாத், பாலகிருஷ்ணன், சிவக்குமார், தனபாலன், ராதாகிருஷ்ணன், மணிவண்ணன், ஜெயமூர்த்தி, பழனிவேல், அருள், மதன்சந்த் ஜெயின், மாவட்ட வர்த்தக சங்க தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags : Cashew Machine Exhibition ,Gadambuliyur ,
× RELATED முந்திரி இயந்திர கண்காட்சியில் புத்தகம் வெளியீடு